tamilnadu

img

புவனகிரி பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்த போராளி காலமானார்

சிதம்பரம், டிச. 14- புவனகிரி பகுதியில் மார்க்  சிஸ்ட் கட்சியை அடித்தட்டு  மக்களிடம் வளர்த்த போராளி, முன்னாள் ஒன்றியச் செய லாளர் க.வெற்றிவேல் (58) காலமானார். கடலூர் மாவட்டம் புவன கிரி பேரூராட்சியில் கள்ளிக்கட்டு  தெருவை சேர்ந்தவர் வெற்றி வேல். இவர் தன்னுடைய 15  வயதில் மார்க்சிஸ்ட் கட்சியின்  அங்கமாக இருந்த சோசலிஸ்ட்  வாலிபர் முன்னணியில் இணைந்து பின்னர்  மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி புவனகிரி பகுதியில் மக்களுக்கு எதிராக  நடக்கும் அநீதிகளை கண்டித்து பல்வேறு  போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டுள்  ளார். புவனகிரி ஒன்றியச் செயலாளராகவும், நகரச் செயலாளராகவும் பதவி வகித்துள் ளார். புவனகிரி பேரூராட்சி உறுப்பினராக இருந்த போது சிறப்பாக செயல்பட்டு மக்கள்  பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவர்.  கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் புவனகிரி  அருகே வடக்குதிட்டை கிராமத்தில் அரசு நில  உச்சவரம்பு சட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. அதனை நில முத லாளி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதில் தலையிட்டு அரசிடம் நிலம் பெற்ற பயனாளிகள், கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தி 20க்கும் மேற்பட்டோருக்கு தலா 1 ஏக்கர் நிலத்தை பெற்றுத் தந்துள்ளார். கள்ளிக்காட்டு பகுதி மிகவும் தாழ்வா னது மழைக்காலங்களில் அங்கு மழை நீர்  சூழ்ந்து இடுப்பளவு நிற்கும்.  அந்தப் பகுதியை மேட்டு பகுதி யாக மாற்றியதற்கு காரணமாக இருந்துள்ளார். அந்த பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களும் வறுமைக் கோடு பட்டியலில் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்  துள்ளார். கள்ளிக்காட்டு பகுதி யில் தனியாக குடிநீர் தொட்டி  அமைத்துக் கொடுத் தது என பட்டியல் நீள்கிறது. தற்போது கட்சியின் ஒன்றி யக் குழு உறுப்பினர், விதொச  ஒன்றியத் தலைவராகவும் பதவி வகித்து  வந்தார். இவர் இந்த பகுதியில் அனைத்து  சமூக மக்களையும் ஒருங்கிணைத்து கட்சிப்  பணி செய்துள்ளதால் அனைத்து சமூக மக்க ளின் மனதிலும் இடம் பிடித்தவர். அவரது உடலுக்கு மாநிலக் குழு உறுப்பி னர்கள் மூசா, மாதவன், மாவட்டச் செயலாளர்  டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மருதவாணன், சுப்புராயன், ரமேஷ்பாபு, அசோகன், ஒன்றி யச் செயலாளர்கள் சதானந்தம், இளங்கோ, மூர்த்தி, வாஞ்சிநாதன், சிதம்பரம் நகரச்  செயலாளர்கள் ராஜா, அமர்நாத், மணவா ளன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் சரவ ணன், அதிமுக மாநில நிர்வாகி உமா மகேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து கட்சி தலை வர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி னர். இவரது கண் புதுச்சேரி மகாத்மா காந்தி  மருத்துவமனைக்கு தானமாக வழங்கப் பட்டது குறிபிடத்தக்கது. அவருக்கு உமா என்ற மனைவியும், 4 பெண் குழந்தைகளும் உள்ளனர்.