கடலூர், ஜூலை 14- தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேள னத்தின் மாநில மாநாடு வரும் 21, 22, 23 மூன்று நாட் கள் திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு தியாகி களின் ஜோதி பயணம் கட லூரில் இருந்து எடுத்துச் செல் லப்படுகிறது. இதற்கான துவக்க நிகழ்ச்சி கடலூர் அரசு போக்குவரத்து பணி மனை முன்பு தலைவர் ஏ.ஜான்விக்டர் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செய லாளர் ஜி.மணிவண்ணன் வரவேற்றார். துணைத் தலைவர் ஜி. பாஸ்கரன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.பழனிவேல், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பால்கி, சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெரியசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். இதில் துணைத் தலைவர்கள் பி.எழிலரசன், எஸ்.ஏ.நடரா ஜன், கே.கிருஷ்ணசாமி, ஏ.தேவராஜலு, கே.சிவக்கும ரவேல், துணைச் செயலாளர் கள் எஸ்.மணிகண்டன், எஸ். ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தோழர் ஜி.கோவிந்த ராஜன் நினைவு ஜோதியை ஓய்வுபெற்ற அமைப்பின் மாநில துணைச்செயலாளர் ஜி.ராமச்சந்திரனும், கே.திரு வேங்கடம் நினைவு ஜோதியை முன்னாள் பொதுச்செயலாளர் எம்.முத்துக்குமரனும், ஆர்.ஜெக தீசன் நினைவு ஜோதியை துணை பொதுச் செயலாளர் பி.கண்ணனும் பெற்றுக் கொண்டனர்.