tamilnadu

img

ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை

சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்த நபரை முதலை இழுத்துச் சென்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 

பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயமணி, தனது மனைவியுடன் பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது ஆற்றில் இருந்த முதலை ஒன்று ஜெயமணியை கடித்து இழுத்து சென்றுள்ளது. இதனால் அவரது மனைவி முத்துலெட்சுமி சத்தம் போட்டதை கேட்டு, அங்கு வந்தவர்கள் ஜெயமணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் மாயமான ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து 3 மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். இதனிடையே வனத்துறையின் அலட்சியமே தொழிலாளி மாயமானதற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியை தொடர முடியாத நிலையில், தற்போது மீண்டும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 



;