tamilnadu

மடுகரையில் கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை

சேதராப்பட்டு, ஜன.7- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அக்ரா மங்கலம் கிராமத்தை சேர்ந்த வர் பாலகிருஷ்ணன், இவரது மகள் ஜெயஸ்ரீ (23). என்ஜி னீயரான இவர் புதுவை மடுகரை ராம்கி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அருண்ராஜியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வடபழனியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெற்றோர்கள் சமாதானம் அடைந்து கடந்த செப்டம்பர் மாதம் இருவருக்  கும் முறைப்படி திருவந்தி புரம் தேவநாதசாமி கோவி லில் திருமணம் செய்து வைத்தனர். இதற்கிடையே ஜெயஸ்ரீ  கர்பமாகி 5 மாதங்களா கியது. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ஜெயஸ்ரீக்கு அவரது பெற்றோர் சடங்கு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது அருண்ராஜ் மற்றும் அவரது தாயார் செல்வி ஆகியோர் தங்க வளையல் கேட்டு ஜெயஸ்ரீ யின் பெற்றோரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகராறின் போது அருண்ராஜை ஜெயஸ்ரீயின் சகோதரர் ஜெயபிரகாஷ் தாக்கியதாகக் கூறப்படு கிறது. பின்னர் உறவினர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்த நிலையில் மகளை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வ தாக அவரது பெற்றோர் அருண்ராஜ் குடும்பத்தினரி டம் தெரிவித்தனர். அதற்கு நாள் சரி இல்லாததால் நல்ல நாள் பார்த்து (புதன்கிழமை) அனுப்பி வைப்பதாக அருண்ராஜ் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் திங்க ளன்று ஜெயஸ்ரீ கணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தாக அவரது சகோதரிக்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெய ஸ்ரீயின் பெற்றோர் மகள் இறப்பில் சந்தேகம் உள்ள தாக கூறி நெட்டப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதனடிப்படை யில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். ஜெயஸ்ரீக்கு திருமண மாகி சில மாதங்களே ஆவதால் தாசில்தார் விசார ணையும் நடைபெற்று வருகிறது.

;