tamilnadu

img

வாடகைக் கார்களை இயக்க அனுமதி கோரி போராட்டம்

கடலூர், மே 28- வாடகைக் கார்களில் 50 விழுக்காடு பயணி களுடன் மாவட்டம் முழுவதும் இயக்குவ தற்கு அனுமதி வழங்கக் கோரி மாவட்ட  ஆட்சியரிடம் வாடகை கார் ஓட்டுனர்கள் உரி மையாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வள்ள லார் கார் ஓட்டுனர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு)  சிறப்பு தலைவர் பி.கருப்பையன், செயலா ளர் சண்முகம், தலைவர் முரளி ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு 60 நாட்கள் கடந்த நிலையில் வாடகை கார் ஓட்டு நர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்  50 விழுக்காடு பயணிகளுடன் மாவட்  டத்தில் கார் இயக்குவதற்கு அனுமதி வழங்க  வேண்டும். தமிழக அரசு ஓட்டுநர் நலவாரியம் மூலம்  அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும், வாகனம் வாங்க பெற்ற கட னுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், ஊரடங்கு காலத்தில் செலுத்த வேண்டிய 2 காலாண்டு வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.