இந்தியன் வங்கியின் சார்பில் கடலூரில் நடைபெற்ற சிறப்பு கடன் வழங்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் வி.அன்புசெல்வன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, இந்தியன் வங்கியின் கள பொதுமேலாளர் கே.சந்திராரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரூ.97.79 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை 2ஆயிரத்தி 153 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.