tamilnadu

img

முதலீட்டை ஈர்க்க சிறப்பு குழு அமைப்பு: அமைச்சர் தகவல்

 கடலூர், மே 1- கொரோனா தடைக்குப் பின்னர் தமிழகத்தில் முதலீட்டினை ஈர்க்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், "கொரோனா பாதிப்புகள் கட்டப்பாட்டிற்குள் வந்த பின்னர் தொழில்துறை யினரின் உலகளாவிய பார்வை இந்தியா வீடு திரும்பும் என கணித்து உள்ளோம்" என்றார். இந்தியாவிற்கு வரும் முதலீடுகளை தமிழகத்திற்கு திருப்புவதற்கான நடவடிக்கையில் இப்போதே ஈடுப்படடு வருகிறோம். இதற்காக மாநில அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஜப்பான், தென் கொரியா, தைவான், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகளும் இக்குழுவில் இணைக்கப்படடுள்ளனர்.

இவர்கள் மூலமாக உலகிலுள்ள முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு? திட்டமிட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கொரோனா கட்டுப்பாட்டிற் குள் வந்த பின்னர் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். அப்போது, தமிழகம் தான் அதிக முதலீட்டினை ஈர்க்கும் மாநிலமாக இருக்கும் என்றும் தமிழகம் தான் இந்தியாவிலேயே ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், செல்போன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு, மருந்து பொருட்கள் தயாரிப்பு, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முன்னணியில் இருந்து வருகிறது. இதனால், இத்துறைகளில் அதிக முதலீட்டினை ஈர்க்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். இளைஞர்களுக்கு ஸ்டார்ட் அப் திட்டம், தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச்சாளர அனுமதி என்று தொழில் துவங்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. எனவே, அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.