tamilnadu

img

குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

சிதம்பரம், ஜூன் 8- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட செங்கல்மேடு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்  பங்கள் உள்ளன. இந்த பகுதி  மக்களுக்கு போர்வெல் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற்றது.  இந்நிலையில் கடந்த 20  நாட்களுக்கு முன்பு அந்த போர்வெல் பழுதடைந்தது.  இதனால் அந்த பகுதி மக்  கள் 3 கிலோமீட்டர் தூரம்  சென்று குடிநீர் எடுத்து வந்த னர்.  இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திர மடைந்த அந்த பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன் தலைமையில் காலிக் குடங்களுடன் கீரப்  பாளையம் வட்டார வளர்ச்சி  அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி னர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்லையா, நெடுஞ்சேரலாதன், சிவ ராமன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பின்னர் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி யிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் விரைவில் உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி  அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.