சிதம்பரம், மார்ச் 10- இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் விழுப்புரம், கடலூர் கிளைகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறையும் இணைந்து ‘நிலையான வேளாண்மை’ என்ற தலைப்பில் கருத்த ரங்கு நடைபெற்றது. துறை முதல்வர் மணி வண்ணன் தலைமை வகித்து பேசுகையில்,“ புதிய வேளாண் மற்றும் தோட்டக்கலை தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நிலை யான வேளாண் பணிகளை மேற்கொள்வ தன் மூலம் விவசாயிகள் பொருளாதார மேம்பாடு அடைய முடியும்” என்றார். கடலூர் மாவட்ட இந்திய பொது நிர்வாக அமைப்பின் பொறுப்பாளர் ரங்கராமானுஜம் பேசுகையில்,“ இன்றைய பல சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் காண வும், விவசாயிகள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் காண இன்றைய இயற்கை வேளாண் தொழில் நுட்பங்களான ஜீரோ பட்ஜெட் விவசாய குறைகளை செயல்ப டுத்த வேண்டும்” என்றார். வேளாண்மை துறை உதவி பேராசிரியர் ராஜ்பிரவின் மற்றும் கடலூர் மாவட்ட முன் னோடி விவசாயிகள் சேகர், சையத்சக்காப், கண்ணன் ஆகியோரின் ஆய்வு மற்றும் அனுபவ பகிர்வுகள் நடைபெற்றது. சுமார் 200 வேளாண் இளநிலை இறுதி யாண்டு மாணவர்கள் மற்றும் வேளாண் விரி வாக்கத்துறை முதுநிலை மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க துறைத் தலைவர் வெற்றிச்செல்வன், கிரா மப்புற வளர்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் வேதாந்த தேசிகன், சண்முக ராஜா மற்றும் ரங்கராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய பொது நிர்வாக நிறுவ னத்தின் விழுப்புரம் பொறுப்பாளர் திருஞான சம்பந்தம் நன்றி கூறினார்.