சிதம்பரம், மே 24- தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்டச் செய லாளர் மாதவன் செய்தி யாளர்களிடம் கூறுகையில் தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு குடிமராமத்து நிதி ஒதுக்கீடு செய்தது. சிறப்பு நிதியின் கீழ் நடைபெற உள்ள பணிகளை கண்கா ணிப்பதற்கு உயர்நிலை அதிகாரிகளை நியமித்தும் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காவரி டெல்டா பகுதியின் கடைக்கோடி மாவட்டமாகும். இந்த மாவட் டத்திற்கு காவிரி டெல்டா பகுதி சிறப்பு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்பட வில்லை. இது விவசாயிகள் மத்தியில் கவலையை உரு வாக்கியுள்ளது. காவிரி டெல்டா மாவட்டம் என்று சிறப்பு நிதி ஒதுக்கும் போது, கடலூர் மாவட்டத்தை சேர்க்காமல் விட்டது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். காவிரி டெல்டா பகுதியை காப்பாற்றுவதாக கடந்த வரு டம் அறிவித்த தமிழக முதல் வர், கடலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதியை யும் சேர்த்து சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது என்று கூறினார்.