சிதம்பரம்,அக்.17- கடலூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடலூர் வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சுத்தம், சுகாதாரம், நெடுங்கால விவசாயத் தொழில்நுட்பம், இயற்கை வளம் மேலாண்மை தொழில் முன்னேற்றம், எதிர்கால தகவல் தொடர்பு மேலாண்மை, விளையாட்டு வழி கணித விளக்கம் என்ற ஆறு தலைப்புகளில் கண்காட்சியில் படைப்புகள் இடம் பெற்றன. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் மாணவர்க ளின் 104 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு தலைப்பில் ஒருவர் என 6 பேர் தேர்வு செய்யப்பட்டு கரூரில் நடக்க உள்ள மாநில அளவி லான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தேர்வு செய் யப்பட்டுள்ளனர். இந்த கண்காட்சியில் சிதம்பரம் அருகே கோவி லாம்பூண்டி கிராமத்திலுள்ள பரங்கிப்பேட்டை ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி பா.நிஷா ‘வள மேலாண்மை’ என்ற தலைப்பில் படைப்பு களை காட்சிப்படுத்தி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்ததோடு கேடயம் வழங்கியுள்ளனர்