tamilnadu

img

ரூ. 23 லட்சம் மோசடி செய்தவர் கைது

சிதம்பரம்,டிச.25- தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் பெயரில் போலி காப்பீடு ஆவணம் தயார் செய்து ரூ.23 லட்சம்  மோசடி  செய்த சிதம்பரத்தை சேர்ந்த பாலா ஜியை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை பஜாஜ் அலையன்ஸ்  பொதுகாப்பீட்டு நிறுவன மேலாளர் சங்கரநாராயணன் (44)  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபி நவ்விடம் புகார் மனு அளித்தார். அதில் கடந்த 18.08.2018 முதல் 30.07.2019 தேதி வரை பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனத்தில் சிதம்பரம் ஏரியா மேனேஜராக பணியாற்றிய சிதம்ப ரம் மன்னார்குடி தெருவை சேர்ந்த ராஜேந்தி ரன் மகன் பாலாஜி (27) சுமார் 23 லட்சம்  மதிப்பில், சுமார் 300க்கும் மேற்பட்ட  போலி இன்சூரன்ஸ் ஆவணம் தயார்  செய்து அதை வாடிக்கையாளர்க ளுக்கு வழங்கியுள்ளார். எனவே  விசா ரணை செய்து  உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்.  இவ்வாறு கூறியிருந்தார்.  இந்த புகாரை மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி  விசா ரணை செய்து நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து  நடந்த விசாரணையில் சிதம்பரத்தில் தலை மறைவாக இருந்த பாலாஜியை சிறப்பு உதவி  ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், சரவணன் மற்றும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் போலி ஆவணம் தயாரிக்க பயன்ப டுத்திய இரண்டு லேப்டாப், பிரிண்டர் ஆகிய வற்றையும் பறிமுதல் செய்தனர்.

;