tamilnadu

கடலூரில் கட்டுப்பாட்டு பகுதிகள் உயர்வு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர், மே 10- கடலூர் மாவட்டத்தில்  கட்டுப்பாட்டு பகுதிகள் 106 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெ. அன்புச்செல்வன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, கடலூர் மாவட்டத்தில் மே 8 வரை யில் கொரோனா தொற்று  393 நபர்களுக்கு உறு திப்படுத்தப்பட்டு அவர்களது குடும்பத்தினரையும் கண்ட றிந்து  தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வழங்கபட்டு வருகிறது. பிற மாவட்டங்கள், மாநி லங்களில் இருந்து வந்த வர்களில் நோய்தொற்று இல்லாத 596 பேரையும் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களை சார்ந்த 1637 நபர்கள் கிராம  கண்காணிப்பு குழு அமைத்து  கண்காணித்து வரப்படு கிறார்கள். நோய் பாதிக்கப்பட்ட வர்களின் கிராமங்கள் மற்றும் நகராட்சி, பேரூ ராட்சியில் உள்ள தெருக் களை கண்டறிந்து 106  பகுதிகளை கட்டுபாட்டு பகுதிகளாக அறிவிக் கப்பட்டுள்ளது. அப்பகுதி களில் உள்ள மக்கள் வெளி யில் வராமலும் வெளியில் உள்ள மக்கள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளே செல்லா மல் இருக்கவும் தடுப்பு  அரண்கள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த நடவ டிக்கைக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  கட்டுப்பாட்டு பகுதியில்  உள்ள மக்கள் தங்களை  14 நாட்கள் சுயக் கட்டுப் பாட்டுடன் வீடுகளிலேயே இருக்க வேண்டும். தமிழக அரசு நோய் தொற்றைத் தவிர்க்கும் வண்ணம் 144  தடை உத்தரவை மே 17  ஆம் தேதி வரையில் கடைப்  பிடிக்க உத்தரவிட்டுள்ளதால் பொதுமக்கள் முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்.  பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதியை தவறாக பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.