tamilnadu

img

கடலூர் ஆட்சியரை கண்டித்து வருவாய்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர் பிப். 26- வருவாய்த்துறை அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் எடுத்துவரும் ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து  தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்கம் சார்பில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஊழியர்கள் மீது எடுத்து  வரும் பழி வாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், நிர்வாக நடைமுறைகளை தொடர்ந்து மீறி வரும் கடலூர் மாவட்ட ஆட்சித்  தலைவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும், வருவாய் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணி தொடர்பாக நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆணை களை விரைவாக வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோ போக்கை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் வரும் 4, 5, 6 ஆகிய தேதிகளில் 72  மணி நேரம் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட போவதாக வரு வாய்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்டச் செயலாளர் மகேஷ் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநி லச் செயலாளர் சு.சங்கரலிங்கம், நிர்வாகி கள் ராஜேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.அரிகிருஷ்ணன், தலைவர் ஆர்.பாலசுப்பரமணியன், பொருளாளர் ரவிச்  சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.