சிதம்பரம், பிப். 12- அண்ணாமலை பல்கலைக்கழக மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் சார்பில், தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பின் துவக்க விழா நடைபெற்றது. தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மின்னியல் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைத் தலைவர் முனைவர் குழந்தை வேல் துவக்கி வைத்து பேசுகையில், தேசிய தொழில்நுட்ப ஆசி ரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பம்சங் கள் குறித்தும், இந்த மாதிரியான பயிற்சி வகுப்புகள் நடத்து வதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். முனைவர் சிவசங்கர், இந்த பயிற்சி வகுப்பின் சாராம் சங்கள் குறித்தும், பயிற்சி வகுப்பின் திட்டத் தொகுப்பையும் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார். பொறியியல் புலமுதல்வர் முனைவர் ரகுகாந்தன் பேசு கையில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் கல்வி நுணுக்கங்களை கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதில் உதவிப் பேராசிரி யர் சரவணன், பயிற்சி வகுப்பின் ஒருங்கிணைப்பாளர் கனி மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துறைத்தலைவர் யமுனா வரவேற்றார்.