சிதம்பரம், ஆக. 13- கடலூர் மாவட்டம் கீரைப்பாளை யம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரனிடம் விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் நெடுஞ்சேரலாதன் தலைமையில் மாவட்ட பொருளாளர் செல்லையா, மார்க்சிஸ்ட் கட்சியின் கீரைப்பாயைம் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் ஆகி யோர் மனு அளித்தனர். அந்த மனுவில், கீரைப்பளையம் ஒன்றியத்திற்குட்பட்ட வடஹரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வி (47) நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த போது, விஷவண்டு கடித்ததில் அவர் மயக்க மடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விஷவண்டு கடித்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்விக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும், அவர் மருத்துவமனையில் இருக்கும் காலத்தை வேலைநாட்களாக கருதி அவருக்கு ஊதியம் வழங்க வேண்டும், அவருக்கு உதவியாக மருத்துவமனையில் இருக்கும் உதவி யாளருக்கும் நூறுநாள் வேலை நாளாக கருதி ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.