கடலூர், ஜூலை 30- கடலூர் மாவட்ட அனைத்து வாகன ஓட்டு னர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் கடலூ ரில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா காலத்தில் சுற்றுலா வாக னங்களை முழுமையாக இயக்க முடியாத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு காலாண்டுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். வாகன கடன்களுக்கு நிதி நிறுவனத் தவணைத்தொகைக்கான வட்டியை ரத்து செய்யவும், கடனைத் திரும்பச் செலுத்தவும் கால அவகாசம் அளிக்க வேண்டும், வாகனக் காப்பீட்டுக்காலத்தை நீடிக்க வேண்டும். ஏற்கனவே அரசு அறிவிப்பின்படி வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ள தால் மீண்டும் புதிதாக மாற்ற வேண்டுமென கூறப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் புதுப்பிக்காத ஓட்டுனர்களுக்கும் நலவாரிய சலு கைகள் வழங்க வேண்டும், புதுச்சேரி செல்ல அனுமதி (பர்மிட்) வழங்கும் கட்டணத்தை குறைக்க வேண்டும், சுங்கவரிக் கட்டணத்தை முறைப்ப டுத்த வேண்டும், வெளி மாநிலங்களில் சுற்றுலா வாகனங்களுக்கு விதிக்கப்படும் நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.