கடலூர், நவ.16- கடலூர் ரயில்வே நிலையத்தின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமாரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பான்பரி மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:- கடலூர், திருப்பாப்புலியூர், லாரான்ஸ் சாலை ரயில் நிலையம் அருகில் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடலூர் சுற்று வட்டார பகுதிகள் மக்கள் பயன்படுத்தி வரு கிறார்கள். ரயில்வே சுரங்க பாதை அமைத்ததினால் மருத்துவ மனைக்கு வரும் பாதை அடைக்க ப்பட்டது. இதனால் நோயாளிகளை அவசர ஊர்தியில் (ஆம்புலன்ஸ்108) அழைத்து வரமுடியவில்லை. எனவே, மருத்துவமனைக்காக பிரதான வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கடலூர் நகராட்சி எல்லையில் அமைந்துள்ளது திருப்பாதிரிப்பு லியூர். அரசின் பல்வேறு துறை களின் தலைமையகம் இங்குதான் செயல்பட்டு வருகிறது. ஆனால், ரயில் நிலையத்திற்கு திருப்பாதிரிப் புலியூர் என்று வைத்துள்ளதால் கடலூர் மாவட்டத்தின் தலைநகரம் என்ற அடையாளம் மறைந்து விடுகிறது.எனவே, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கடலூர் மாவட்டத் தலைநகரமாக இருந்தும் பல முக்கிய ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்லாத நிலை உள்ளது. மேலும் எவ்வித அடிப்பட வசதிகளும் இல்லாத ரயில் நிலையமாக உள்ளது. இதில் மாற்றத்தை கொண்டு வர திருப்பாதிரிப்புலியூர் உள்ள ரயில் நிலையத்தை “கடலூர் திருப்பாதிரிப்புலியூர்” என்று பெயர் மாற்றம் வேண்டும். மேலும் இப்பகுதியில் செல்லூம் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் - பாண்டி - சென்னை இருப்புப்பாதை திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். விழுப்புரம் - மயிலாடு துறை, மயிலாடுதுறை - விழுப்புரம் வழியாக காலை- மாலை நேரங்களில் மட்டும் பாசஞ்சர் ரயில் செல்கிறது. பேருந்துக் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பான்பரி மார்க்கெட்டிற்கு காய்கறி எடுத்து செல்லும் பாதையை திறந்து விடநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ரயில் அதிகாரி,உரிய முறையில் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், கடலூர் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆளவந்தார், வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் நடராஜன், பக்கீரான், குரு ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
ரயில் மறியல்
இந்த கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இம் மாதம் 31 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் திட்ட மிட்டுள்ளனர்.