கடலூர், மார்ச் 17- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள லால்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 563 மாணவர்கள் படித்து வருகின்ற னர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு, இயற்பியல் பிரிவில் படித்து வரும் மாணவி ஒருவரை இயற்பியல் ஆசிரியர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு, ஆபாசமான வார்த்தையில் திட்டி, அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது வகுப்பில் இருந்த சகமாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வில் 48 மாணவர்களுக்கும் மதிப்பெண் குறைக்கப்பட்ட தாக கூறப்படுகிறது. இதுகுறித்து செவ்வாயன்று (மார்ச் 17) பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இது குறித்து கேட்டனர். இதுபற்றி தகவலறிந்த காட்டுமன்னார் கோவில் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் மீது புகார் கொடுத்தால், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.