tamilnadu

img

குமட்டிபழ தாவரம் மீட்டெடுத்தல் நிகழ்ச்சி

 சிதம்பரம்,ஜூன் 13- சிதம்பரத்தில் பசுமை இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இயற்கையான குமட்டிபழத் தாவரத்தை மீட்டெடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. பாரம்பரிய சித்த வைத்தியர் சங்கத் தலைவர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். பேராசிரியர் சரவணன், இயற்கை வாழ்வியல் ஆலோசகர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் இளங்கோவன் கலந்து கொண்டு பாரம்பரிய குமட்டி பழம் மற்றும் விதை விவசாயிகளுக்கு வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், பசுமை ஹாஜி, மணிபாரதி அச்சக மணிவண்ணன், பொறியாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் இந்த பழத்தாவரம் முற்றிலும் அழிந்து விட்ட நிலையில், பசுமை இயக்கங்களின் கூட்டமைப்பினர் நாகை மாவட்டம் கோடியக்கரை, வேதாரண்யம், வேளாங்கண்ணி பகுதில் உள்ள குக்கிராம பகுதிக்குச் சென்று இந்த பழத்தாவரத்தின் விதை வாங்கி வந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர், சேந்திரக்கிள்ளை ஆகிய இடங்களில் பயிரிட்டு அதன் பழம் மற்றும் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.