கடலூர், ஜூன் 9- கடலூர் மாவட்டம் குறிஞ்சிப் பாடி பகுதியில் சூறைக் காற்றி னால் சேதமடைந்த வாழை மரங் களை கணக்கெடுப்பு செய்து நிவா ரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் மாவட்ட ஆட்சி யருக்கு அனுப்பியுள்ள மனுவில், சமீபத்தில் பெய்த மழை மற்றும் சூறைகாற்றால் குறிஞ்சிப்பாடி பகுதியில் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். குறிஞ்சிப்பாடி வட்டம் வெங்கடாம் பேட்டை, கிழூர் பகுதியில் கடந்த 6ஆம் தேதி இரவு காற்றுடன் பெய்த மழையால் சுமார் 50 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். எனவே தோட்டக்கலை துறை மூலம் தாமதமின்றி பாதிக்கப்பட்ட வாழை மரங்களை கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.