இந்திய இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு, நீதி, சுதந்திரம், சமத்துவத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாக்கும் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கடலூர் சிங்காரவேலர் சிலை அருகில் நடைபெற்றது. சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார். திமுக நகரச் செயலாளர் து.ராஜா, மதிமுக நகரச் செயலாளர் ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் பா.தாம ரைச்செல்வன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார், குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இதேபோல், விருத்தாசலம் பாலக்கரை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன் தலைமையில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.