கடலூர், ஜூலை 6- கடலூரில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. மின்சார வரைவு திருத்த மசோதா 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020, வேளாண் பொருட்கள் வணிக ஊக்கு விப்பு அவசரச் சட்டம் 2020, விவசாயி களுக்கான விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020 ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெறுகிறது. அதன் துவக்க நிகழ்ச்சி கடலூர் ஜவான் பவன் அருகில் மாவட்டத் தலைவர் விஜய குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலப் பொருளாளர் கே.பி.பெரு மாள், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், அனைத்து விவசாய சங்க தலைவர்கள் கார்மாங்குடி வெங்கடேசன், ரவீந்திரன், இளங்கீரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் வி.எம்.சேகர், விருத கிரி, பசுமை வளவன், தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.