tamilnadu

செய்தித் துளிகள்

கொலை

கடலூர் திருப்பாதிரிப் புலியூர் புதுநகரை சேர்ந்தவர் காமராஜ் (22)  நண்பர்கள் 5 பேரால் கொலை செய்யப் பட்டார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறிமுதல்

கள்ளக்குறிச்சி அருகே முதலூர் பகுதியில் இருந்து லாரி மூலம் 205 மூட்டைகளில் 10 ஆயிரத்து 250 கிலோ ரேசன் அரிசி கடத்தவிருந்த காமராஜர் தெருவை சேர்ந்த ஏழுமலை (38), கோட்டாலப்பாக்கத்தை சேர்ந்த சண்முகம் (30) ஆகிய 2 பேரை விழுப்புரம் குடிமைப்பொருள் காவல் துறையினர் கைது செய்து, அரிசியையைம், லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஆபிரி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனுசாமி (எ) அப்பையா(57) யானை தாக்கி உயிரிழந்தார். கடந்த 16ஆம் தேதி புலியரசி கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஜோகீர் பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் யானை தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.