tamilnadu

தொலைதுர கல்வியை 3 ஆண்டுகளில் முடிக்க வேண்டும்: துணைவேந்தர்

சிதம்பரம், ஆக. 5- அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை துணைவேந்தர் முருகேசன் தொடங்கி  வைத்தார்.   இதில் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன், தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குனர் ராஜசேகரன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் செல்வநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர், தொலைதூரக்  கல்வி இயக்ககம் வாயிலாக இந்த கல்வியாண்டில்  242 பாடப்பிரிவு கள் நடத்தப்படவுள்ளது.  இதில் முதுகலை பட்டப்படிப்பு 65, இளநிலை  பட்டப்படிப்பு 66, முதுநிலை பட்டயப் படிப்பு 52, பட்டயப் படிப்பு 36 மற்றும்  சான்றிதழ் படிப்புகள் 23 என நடத்தப்படவுள்ளது. முதல் பருவத்தேர்வு முறை தொடங்கப்பட்டு அனைத்து முதுநிலை மற்றும் இளநிலை பாடப்பிரிவுகள் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடத்தப்பட்டுவரும் பாடப் பிரிவுகள் அனைத்தும் இணையதளத்தின் வாயிலாக நடத்தப்படுகின்றன.

இந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை இலக்கு 1 லட்சத்து  10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அவர்களின்  முதுநிலை, இளநிலை பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு உள்ளிட்டவை களை  மூன்று வருடத்திற்குள் முடித்துவிட வேண்டும்.  இல்லையெனில் அவர்களது பதிவு எண் தானாக நீக்கப்பட்டு விடும்.  அதன்பிறகு மாண வர்கள் மீண்டும் படிப்பைத் தொடர வேண்டும் என்றார்.   கல்வி கட்டணங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே  ஏற்றுக்கொள்ளப்படும். மாணவர்களுக்கு சந்தேகம் என்றால் பல்கலைக்கழக இணையதளம் மூலம் அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம் என்றார்.

;