tamilnadu

நல்லாசிரியர் விருதுத்தேர்வில் குளறுபடி

கடலூர், ஜூலை.23- சிறந்த முறையில் கல்விப்  பணியாற்றும் ஆசிரியர் களை  கௌரவிக்கும் வகை யில் மத்திய, மாநில அரசு களால் நல்லாசிரியர் விருது கள் தனித்தனியாக வழங் கப்பட்டுகின்றன. அதன்படி தேசிய நல்லா சிரியர் விருதுக்கான விண்  ணப்பங்கள் இணையதளம்  மூலமாக ஆசிரியர்களிட மிருந்து பெறப்பட்டன. அவ்  வாறு பெறப்பட்ட விண்ணப் பங்களின் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை சரிபார்க்கும்  பணி கடலூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  அலுவலகத்தில் புதன் கிழமை நடைபெற்றது.  முதன்மைக்கல்வி அலுவ லர் கா.ரோஸ்நிர்மலா, மாவட்ட ஆசிரியர் பயிற்சி  பள்ளி முதல்வர் கலா,  வட லூர் ஓபிஆர் கல்வி  நிறுவ னங்களின் தாளாளர் ஆர்.செல்வராஜ் ஆகியோர்  ஆவ ணங்களை சரிப்பார்த்தனர். கடலூர் மாவட்டத்திலிருந்து இந்த விருதுக்கு விண் ணப்பித்திருந்த  27  பேர் அழைக்கப்பட்ட  நிலையில்  21 மட்டுமே பங்கேற்றனர்.

அவர்களது கல்விப்பணி யின் அதிகபட்ச ஆண்டு, பணி புரியும் கல்வி நிறுவனத்திற்கு தேவையான அடிப்படை மற்றும் கூடுதல்  வசதிகளை அவர்களது முயற்சியில் மேற்கொண்டது, அரசின்  பயிற்சிகளில் முறையாக பங்கேற்றது, கல்வித்துறை சம்பந்தமாக புத்தகம் எழுதி யது, அரசின் பாடத்திட்டத் தில் பங்காற்றியது போன்ற  தகுதிகளை அடிப்படை யாகக் கொண்டு இந்த தேர்வு  நடைபெற்றது. கடலூர் மாவட்டம் மட்டு மின்றி தமிழகத்திலும் சிறந்த  கல்வியாளராக அறியப்ப டும்  தனியார் பள்ளியின் முதல்வர் இந்தத் தேர்வு  முறையை கடுமையாக விமர்சித்து தேர்வுக் குழு வினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வெளியேறினார். தனது செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளாமல் பல் வேறு குளறுபடிகளில் தேர்வுக் குழுவினர் ஈடுபடுவ தாக அவர் தெரிவித்தார். அதேபோல் அரசுப்பள்ளி தலைமையாசிரியரும் தனது  அதிருப்தியை பதிவு செய் தார். செய்த பணிகளை குறிப்  பிட்டால்  அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.