சிதம்பரம், பிப். 15- அதிமுக 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றக் கோரி முஸ்லிம் அமைப்பினர் முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். சிதம்பரம் தெற்கு வீதியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 72ஆவது பிறந்த நாளையொட்டி யும் கழக வளர்ச்சி குறித்தும் தெற்கு வீதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டி யன், காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் உட்பட கட்சியின் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கூட்டம் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.