tamilnadu

கடலூர் நகராட்சியில் ரூ.41.38 கோடி வரி பாக்கியை வசூலிக்க தீவிரம்

கடலூர், பிப். 12- கடலூர் நகராட்சி நிர்வாகம் வரி பாக்கியை வசூலிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி  வருகிறது. கடலூர் நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம் ஆகிய வகைகளில் ரூ. 26.36  கோடி பாக்கி உள்ளது. அதேபோல் தொழில் வரி, தொழில்  உரிமக்கட்டணம், புதை சாக்கடை கட்டணம் ஆகிய இனங்க ளில் ரூ.15.02 கோடி என மொத்தம் ரூ. 41.38 கோடி செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ளது.  நகராட்சி நிர்வாகமும் குடிநீர் வடிகால் வாரியம், மின்சார  வாரியம் உட்பட பல்வேறு துறைகளுக்கு ரூ. 43 கோடி செலுத்த வேண்டியுள்ளது. ஆகையல் வரியை வசூலிக்க வேண்டிய கட்டாயம் நகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுடன் நகராட்சி ஆணையர் ராம மூர்த்தி ஆலோசனை நடத்தினார். இதில் நகராட்சிப் பகுதி யில் தற்போது ரூ. 42 கோடியில் மழைநீர் வடிகால் கட்டும்  பணி, ரூ. 25.39 கோடியில் சாலை அமைக்கும் பணி, ரூ. 6.71  கோடியில் திடக்கழிவு மேலாண்மைப் பணி போன்றவை நடைபெற்று வருகிறது. மேலும், புதிதாக பேருந்து நிலை யம் அமைத்தல், விடுபட்ட பகுதிகளில் புதை சாக்கடை அமைத்தல் மற்றும் வளர்ச்சிப்பணிகள் நடைபெற உள்ளது. எனவே அனைவரும் வரியை கட்ட வேண்டும். இது தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதே போல் வணிகர்களுடனும் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரி வித்தனர். இக்கூட்டத்தில், குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் பி.வெங்கடேசன், பொதுச்செயலர் மு.மருதவாணன், நகராட்சி  பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர்நல அலுவலர் ப.அர விந்த்ஜோதி, மேலாளர் த.பழனி, உதவிப் பொறியாளர் ஜெய பிரகாஷ்நாராயணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்