tamilnadu

img

வெளுத்து வாங்கும் கன மழை கடலூரில் 8 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

கடலூர், டிச.1- கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதோடு, 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. கடலூரை பொறுத்த வரை ஒரே நாளில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடலூரில் 80-க்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. ஒருசில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். வீடுகளில் தேங்கி நின்ற தண்ணீரை மோட்டார் மற்றும் வாளியைக் கொண்டு வெளியேற்றி னர். இருப்பினும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்து செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி தீவுபோல் காட்சியளிக்கிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யை அடுத்த ரோமாபுரி பகுதியில் உள்ள முட்டன்ஏரி மற்றும் என்.எல்.சி. ஏரி ஓடைப் பகுதிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. அந்த தண்ணீர் கடலூர்-விருத்தாசலம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் 300 வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். மேலும் வீட்டிற்குள்புகுந்த தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.  இதேபோல் கே.என்.பேட்டை, உச்சிமேடு, கோண்டூர், காட்டு மன்னார்கோவில், கல்லறைகுட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாது காப்பான பகுதிக்கு அனுப்பி வைக்க ப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆறு, தென்பெண்ணை யாறு, மணிமுக்தாறு, வெள்ளாறு, காவிரியின் கிளையான கொள்ளி டம் ஆறு, பரவனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் இருகரைகளை யும் தொட்டபடி மழை வெள்ளம் செல்கிறது. மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி மற்றும் 300க்கும் மேற்பட்ட சிறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதைத்தொடர்ந்து பொதுப்பணி த்துறை அதிகாரிகள் அனைத்து ஏரி களையும் தங்களது கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு இன்றும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் படகுகளை கடற்கரையோரம் பாது காப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

;