tamilnadu

img

அறிவிப்பில்லாமல் நடைபெற்ற கிராமசபைக் கூட்டம்

கடலூர், ஜூன் 22- குடிநீர் தட்டுப்பாடு தீவிரம டைந்துள்ள நிலையில் மாவட்டத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் கிராமசபைக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  நிலவி வருகிறது. மாவட்ட நிர்வாகம்  சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் வீடுகள், வணிக நிறுவனங்க ளில் பயன்படுத்தப்படும் மின்மோட்டார்  கள் மூலமாக குடிநீர் திருட்டு தாராள மாக நடைபெறுகிறது. இதனால், பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை யில், விருத்தாசலம், மங்களூர் ஊராட்சி  ஒன்றியப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம்  குறைந்ததால் தண்ணீர் கிடைக்க வில்லை. இவ்வாறு மாவட்டத்தில் குடி நீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நிலை யில் மாவட்டத்திலுள்ள 683 ஊராட்சி களிலும் சனிக்கிழமையன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிக்கு சொந்தமான கட்ட டங்கள், சிறிய குட்டைகளை மழைநீர் சேமிப்பதற்கு உகந்ததாக தயார் செய்ய  வேண்டும். மரம் நடும் விழா நடத்துதல்,  பொதுச்சொத்து, தனிநபர் இல்லங்க ளில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்தல், மழைநீர் சேமிப்பு தொடர்  பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய தீர்மானங்களின் அடிப்படையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மாவட்டத்தில் எந்த ஊராட்சியிலும் முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை. குறிப்பாக, கிராம சபைக் கூட்டம் குறித்து தண்டோரா மூலமாக ஒவ்வொரு கிராமத்திலும் அறி விக்கப்படும். ஆனால், சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு அப்படி எந்த விதமான அறிவிப்போ, ஊராட்சிமன்ற அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்க ளில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட வில்லை. இதுகுறித்து, ஊராட்சி செயலா ளர்கள் தெரிவிக்கையில், சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை இரவுதான் தெரி வித்தது. எனவே, கிராமத்திலுள்ள முக்கிய நபர்களுக்கு செல்போன் மூல மாக தகவல் தெரிவித்தோம். சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம்  அறிவிக்கப்பட்ட போதிலும் பொது மக்கள் வராததால் நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்ட தொழி லாளர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி யதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்றனர். குடிநீர் பிரச்னையை சமாளிக்க பகுதி  மக்களின் ஆலோசனையைக் கேட்டு அதை அமல்படுத்துவதற்கான கூட்டம்,  இப்படி எந்த முன்னறிவிப்பும் இல்லா மல் சம்பிரதாயத்திற்காக நடத்தி முடிக்கப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.