சிதம்பரம், மார்ச் 1- கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மீதுகுடி சுடுகாட்டுப் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ருவாண்டா நாட்டைச் சேர்ந்த புருனே முகவேனிமானா (27) என்பவர் சுமார் 800 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை காவல் துறையினர் கைது செய்தனர். வெளிநாட்டு மாணவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்து, ஊருக்கு திரும்ப செல்வதற்காக பணம் இல்லாததால் கஞ்சா விற்றதாகக் கூறப்படுகிறது.சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து வெளிநாட்டு மாண வர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.