tamilnadu

img

கடலூர் துறைமுகத்தில் மீன் வரத்து அதிகம் விலை இல்லாமல் மீனவர்கள் வேதனை

கடலூர், மார்ச் 23- கடலூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் தங்கி மீன்பிடிக்க 50 க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகு மூலம் மீனவர்கள் சென்றனர். இவர்கள் திங்களன்று (மார்ச் 23)  துறைமுகத்தை வந்தடைந்தனர். சூரை மீன்கள் அதிகம் பிடிபட்டன. இந்த மீன்கள் தமிழகத்தில் அதிகமாக பயன்படுத்த மாட்டார்கள். இதனால் சூரை மீன்களை  கேரளா மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.  சூரை மீன்கள் அதிகம் பிடிக்கப்பட்டுள்ளதால் அதை என்ன செய்வதென்று தெரியாமல், நின்ற சூழலில் மீன் வியாபாரிகள், மீன்களை கேரளாவிற்கு கொண்டு செல்கி றோம். மாநில எல்லையில் விட்டால் அங்கு என்ன விலை விற்கிறதோ. அதன்படி விலை நிர்ணயித்து விற்பனை செய்வோம் என்ற முடிவில், வியாபாரிகள் மீன்களை விலையில்லாமல் ஏற்றிச் சென்றனர்.  மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இந்த மீன்களை கேரளாவில் கொண்டு சென்று விற்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.