மேற்கு வங்கத்தில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு, மருத்துவமனையில் தகராறில் ஈடுபடுபவர்களிடம் இருந்த மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.