கொரோனோ காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், கொரோனோ பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் உள்ளிட்ட பொது மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் செங்குட்டை, சேனூர், சேர்க்காடு, சேர்க்காடு, பாலாஜி நகர், வள்ளலார் நகர், அம்பலூர், மதனாஞ்சேரி, சோளிங்கர் உள்ளிட்ட 8 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் கே.ஆண்டாள், செயலாளர் எம்.இந்துமதி, நிர்வாகிகள் பானுமதி, சரளா, ஆர்.கீதா, அம்சம்மாள், ஆண்டாள், நவநீதம், மோகனா, பார்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.