கடலூர், மார்ச் 16- நகராட்சித் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என தென்னாற்காடு மாவட்ட நகராட்சித் தொழி லாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நா.பக்கிரி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மு.பாண்டுரங்கன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் த.செல்வராஜ் செயலறிக்கையையும், பொருளாளர் ப.அரசகுமாரன் நிதி நிலை அறிக்கையினையும் வாசித்தனர். நிறுவனத் தலைவர் ச.சிவராமன், துணைத் தலைவர் சி.பக்கரி ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், 144 துப்புரவுப் பணியாளர்களுக்கு 2001 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை உடனடி யாக வழங்க வேண்டும், 25 ஆண்டுகள் பணி முடித்தோருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதிய முன்மொழிவு களை உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும், ஓய்வு பெறும் அன்றே பணப்பயன்களை வழங்க வேண்டும், துப்புர வுப் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அண்ணாபாலம் அருகிலிருந்து நகராட்சி தொழிலாளர்களின் கோரிக்கை பேரணி நடைபெற்றது.