tamilnadu

img

வைரஸ் பரவலை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை : கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சிதம்பரம், ஜூன் 16- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க  மாநில அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லை. இதில் ஆக்கப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  வலியுறுத்தி யுள்ளார். கொரோனா ஊரடங்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரத்தில் செவ்வாயன்று (ஜூன் 16) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: சென்னையில் மருத்துவர்கள், செவி லியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனை வரும் பாகுபாடின்றி கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

ஆனால், மாநில அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஊரடங்கு காலத்தை முறையாக கடைப் பிடித்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்த பரவலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், தட்டுத் தடுமாறிய அரசு தற்போது வேறு வழி யில்லாமல் 4 மாவட்டத்திற்கு மட்டும் ஊரடங்கு அறிவித்துள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு அறிவித்தது  அவசியம் என்றாலும்கூட, இதுமட்டுமே நோய் பரவலை  தடுத்துவிட முடியாது. நான்கு மாவட்டங்களில்  பரவலாக சோத னைகளை அதிகரிக்க வேண்டும். அனைவரை யும்  பரிசோதித்து  யாருக்கு நோய்த்தொற்று  உள்ளதோ அவர்களை  தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனத்தில் முறைகேடு
ஜூலை மாதம் நோய்த்தொற்று மிக உச்சத்தை எட்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளை அரசு தயார் செய்து வைக்க வேண்டும். இந்த நேரத்தில் கூட தேவையான அளவில்  மருத்துவர்கள், செவிலியர்களை நிரந்தரமாக நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையில்   நியமிக்கும் முயற்சி  தவறானது. 
தனியார் நிறுவனம் மூலம் நியமனம்
தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறையில், ஜென்டில்மேன் ஏஜென்சி என்ற நிறுவனம் மூலம் மருத்துவர்கள்,செவிலியர்களை நிய மனம் செய்து பணி அமர்ந்திருக்கிறார்கள். இதன் மூலம் மிகப்பெரிய ஊழலுக்கு வழி வகுத்துள்ளனர். இதுவரைக்கும் சுமூக மான நிலை திரும்பாத நிலையில், ஒரு  குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ. 7 ஆயிரத்து 500, மாநில அரசு ரூ. 5000 நிவாரணத் தொகை யாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க வேண்டும். பொது மக்களின் கையில் பணம்  இருந்தால் மட்டுமே பொருட்களை வாங்கு வார்கள். வேலையையும், வருமானத்தையும் இழந்து, பட்டினியாக இருக்கும்போது மேலும் நெருக்கடிகள் அதிகமாகும்.
மாநில அரசுகளுக்கு நிதியுதவி
மக்களின் வாழ்வாதாரத்திற்கு மத்திய-மாநில அரசுகள் ரூ.12500 நிவாரணம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அது போல், மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். ஜிஎஸ்டி பங்குத் தொகை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டி யதை வழங்கவில்லை. அதை வழங்க மறுக்கிறார்கள்.

மாநில அரசுகளுக்கு நெருக்கடி
மாநில அரசு கடன் வாங்க அனுமதி கேட்டால் கூட நாங்கள் சொல்கின்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டால்தான் கடன் வழங்க அனுமதி யளிப்போம் என மத்திய அரசு கூறுகிறது.  மாநில அரசின் கையை கட்டி வைத்திருக்கிற நிலை யை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. எனவே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஷ்மீர் முதல் குமரி வரை ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். இதற்கு அரசு செவிசாய்க்க வில்லை எனில், அடுத்தகட்ட போராட்டத்திற்கு நாங்கள் செல்வோம்.

சென்னையில் பலி எண்ணிக்கை மறைப்பு?
சென்னையில் கொரோனா நோய் தாக்கு தலில் பலி எண்ணிக்கையை சொல்ல தயங்கு கிறது. அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். தனியார் மருத்துவ மனைகள், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அத்தனையும் அரசாங்கம் கையகப்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான செலவை தனியார் மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் காப்பீட்டு தொகை மூலமாகவோ,அரசு நிதி மூலமாகவோ நேரடியாக வழங்க வேண்டும். இதை செயல்படுத்தினால்தான் பலி எண்ணிக்கையை குறைக்க முடியும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரி வித்தார்.