tamilnadu

img

வேப்பூரில் பேருந்து நிலையம் அமைக்க சிபிஎம் வலியுறுத்தல்

கடலூர், அக். 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேப்பூர் வட்ட மக்கள் கோரிக்கை மாநாடு நல்லூரில் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.சாமி நாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன், கடலூர் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், விருத்தாசலம் வட்டச் செயலா ளர் என்.எஸ்.அசோகன், வட்டக் குழு உறுப்பி னர்கள் ஏ.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஆர்.ஜீவானந்தம், கே.எம்.குமரகுரு, பி.பெரியசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பொன்.சோமு நன்றி கூறினார். முன்னதாக புதுகை பூபாளம் கலை  நிகழ்ச்சி நடைபெற்றது. வேப்பூர் வட்டத்தில் கருவூலம் அமைக்க  வேண்டும், அனைத்து பேருந்துகளும் வந்து  செல்லும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கக் வேண்டும், தே.புடையூரில் உள்ள  மருத்துவக் கழிவு தொழிற்சாலையை அகற்ற வேண்டும், அனைத்து ஏரி, குளங்களின் ஆக்கிரமிப்பை அகற்றி ஆழப்படுத்தி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், சேப்பாக்கம் - கொளப்பாக்கம் இடையில் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் தடுப்பணை கட்ட வேண்டும், அனைத்து சுடு காட்டு பாதையிலும் தார்சாலை அமைக்க  வேண்டும்,  விவசாயிகள் பயன்பெறும் வகை யில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

;