tamilnadu

கடலூரில் சிறைச் சாலை கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று

 கடலூர், ஜூன் 23- கடலூர் மத்திய சிறைச்சாலையை மிரட்டி வந்த கொரோனா கிளை சிறைச்சாலையும் விட்டு வைக்கவில்லை. கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 10 கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் சிறை காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் கிளை சிறைச்சாலையில் இருந்த கைதிகள் அனைவரும் மத்திய சிறைச் சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிளை சிறைச்சாலை முழுவதும் நகராட்சி ஊழியர்கள்  கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தினர்.

;