சிதம்பரம், மே 6- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் அருகே சி. தண்டேஸ்வ ரர் நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாரி யப்பன் தலைமையில் நகரச் செயலாளர் ராஜா, ஒன்றி யக் கவுன்சிலர் முருகா னந்தம், கிராம பொதுமக்கள் பாலச்சந்தர், ஷேக்பரீத், அப்துல்கபூர், பரூக், செல்வ கணபதி ஆகியோர் சிதம்ப ரம் டிஎஸ்பி கார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் சிதம்ப ரம் வட்டம் சி. தண்டேஸ்வரர் நல்லூர் ஊராட்சி அருகில் நகராட்சி கட்டுப்பாட்டில் குப்பைக் கிடங்கு செயல் பட்டு வருகிறது. குப்பைக் கிடங்கு சுற்றியுள்ள பகுதி களில் ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசிக் கின்றன. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் வரையறுக்கப் பட்ட பகுதிக்கு வெளியே குடி யிருப்புகளுக்கு அருகில் தனியார் நிலங்களை ஆக்கிர மித்து தொடர்ந்து குப்பை களை கொட்டி வருகிறது.
மேலும் குப்பைகளை எரித்தும் வருகிறது. இத னால் அங்கு குடியிருப்ப வர்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். மேலும் சுற்றியுள்ள குடிசைகள் எரி யும் அபாயமும் உள்ளது. குப்பைகளால் கொசு, ஈக்கள் உற்பத்தியாகி காலரா, மலே ரியா போன்ற நோய்கள் உரு வாகக் கூடிய வாய்ப்பும், பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவ தால் டயாக்சின் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியீட்டு புற்றுநோய் ஏற்படும் அபாய மும் உள்ளது. நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபா யம் உள்ளது. எனவே சுற்றுச்சூழல் மாசுபாடு, உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்குகின்ற செயல் பாடுகளை தடுக்க தவறிய சிதம்பரம் நகராட்சி ஆணை யர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.