சிதம்பரம், ஆக. 10- சிதம்பரத்தில் வருவாய் துறை சார்பில் பழங்குடி ஆதிவாசி மக்களுக்கு( இருளர்) சாதி சான்று வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. வட்டாட்சியர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் பழங்குடி நலத் துறை தனி வட்டாட்சியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். சாராட்சியர் விசுமகாஜன் கலந்து கொண்டு, பழங்குடி ஆதிவாசி மக்கள் (இருள இன மக்கள்) 163 பேருக்கு சாதி சான்றும், 88 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வும், 18 பேருக்கு நலவாரிய அட்டையும் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “இந்த சாதி சான்றிதழை வைத்து குழந்தைகளை பள்ளி அனுப்பி படிக்க வைக்க வேண்டும். படித்து சமூகத்தில் உயர வேண்டும். அரசின் சலுகை கள் ஏராளமாக உள்ளதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை (தெற்கு) பகுதியில் வசிக்கும் பழங்குடி ஆதிவாசி மக்கள் சுமார் 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.