tamilnadu

img

அகற்றப்படாத இறால் பண்ணைகள் ஆக. 7-ல் முற்றுகை

சிதம்பரம், ஜூலை 26- கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சி யில் 10 கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிர முகர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள்  கூட்டம் திமுக செயலாளர் கிள்ளை ரவீந்திரன்  தலைமையில் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் ரமேஷ்பாபு, இளைஞர் காங்கிரஸ் செய லாளர் சசிகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர்கள் விஸ்வநாத், ராம தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிள்ளை பக்கிங்காம் கால்வாய் பகுதி களில் உள்ள  தனியார் இறால் பண்ணைகளை  அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார் ஆட்சியர், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே, இறால் பண்ணையை அகற்றக் கோரியும், மெத்தனமாக இருக்கும் அதிகாரிகளை கண்டித்தும்  ஆகஸ்ட் 7ஆம் தேதி பரங்கிப்  பேட்டை மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.