tamilnadu

img

கடலூர் முப்பெரும் விழாவில் 50 ஆண்டு போராளிகள் கவுரவிப்பு

கடலூர், ஆக. 25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா கடலூரில் சனிக்கிழமை (ஆக. 24) எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் 50 ஆண்டுகளாக கட்சிக்கும், பொதுமக்கள், தொழிலாளர் நலன்களுக்காக போராடிய தோழர்கள் கவுரவிக்கப்பட்டனர். தோழர்கள் ஜி.கலியபெருமாள் (88), பி.எஸ்.மகாலிங்கம் (80), எஸ்.துரை ராஜ் (75) ஆகியோரை அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிரகாஷ்கார த்தும், வி.சீனிவாசன் (81), ஆர்.வி.சுப்பிர மணியன் (73), எஸ்.சந்திரா (68), கே.துரைசாமி (81), ஏ.நடராஜன் ஆகி யோரை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியும், எஸ்.பாவாடை (82), பி.சின்னையன் (79), இ.பெருமாள் (74), எல்.ஜீவா (70), வி.கலியபெருமாள் (72), ஆகியோரை மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணனும், ஏ.நடராஜன் (94), ஏ.கிருஷ்ணமூர்த்தி (87), கே.தங்க வேலு (91), டி.நாராயணசாமி (92) ஆகியோரை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனும் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர். 

குமார், ஆனந்தன் தாயார் கவுரவிப்பு
கள்ளச்சாராயத்திற்கு எதிராகவும் மக்கள் நலனுக்காகவும் போராடி களப்பலியான குமார், ஆனந்தன் ஆகியோரின் தாயார் சாவித்திரி அம்மாள் மற்றும் சகோதரி ஆகியோருக்கு மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி சால்வை அணிவித்து கவுரவித்தார். 
மாநிலப் பணிக்கு சென்ற தோழர்களுக்கு கவுரவிப்பு
ஒன்றுபட்ட தென் ஆற்காடு மாவட்டமாக இருந்து இன்று புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு என நான்கு மாவட்டக் குழுக்களாக விரிவடைந்து செயல்படும் நிலையில் இதற்காக உழைத்து மாநில பணிகளுக்கு சென்ற தோழர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, எஸ்.வாலண்டினா, வி.பெருமாள், ஜி.ஆனந்தன், புதுச்சேரி டி.முருகன், பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் வே.கு.நிலவழகன், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் பி.குமார் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
நினைவு ஜோதி
முன்னதாக மறைந்த சி.கோவிந்த ராஜன், ஷாஜாதி, எஸ்.நடராஜன், என்.ஆர்.ராமசாமி, எஸ்.வீரபத்திரன், கே.திருவேங்கடம், எம்.ரத்தின சபாபதி, டி.ஆர்.விஸ்வநாதன் ஆகிய தோழர்களின் நினைவாக செந்தொண்ட ர்களால் கொண்டுவரப்பட்ட நினைவு ஜோதியை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி அதிர்வேட்டுகள் முழங்க பெற்றுக் கொண்டார்.