tamilnadu

img

சிதம்பரம் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

சிதம்பரம், ஜன. 19- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் நகரில் உள்ளது தில்லை  அம்மன் கோவில். இந்த  கோவில் இந்து அறநிலையத்  துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்கள் காணிக் கைகளை உண்டியலில் செலுத்துவார்கள். உண்டி யலை என்னும்போது பல லட்ச ரூபாய் இருக்கும். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கோவி லுக்கு உள்ளே உள்ள அற நிலைதுறை அலுவலகம் முன்பு இருந்த பெரிய உண்டி யலை மர்ம நபர்கள் உடைத்து  அதில் இருந்த லட்சக்கணக் கான ரூபாய் மற்றும் பக்தர்  கள் செலுத்திய தங்க நகை கள் ஆகியவைகளை கொள்ளை அடித்துச் சென் றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல் கோவிலை திறந்து பார்த்த ஊழியர்கள், உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஊழியர்கள் சிதம்பரம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் வழக்குப்  பதிவு செய்து, செய்து சிசி டிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்ற னர். மேலும் கோவில் ஊழி யர்களிடம் விசாரணை நடத்தி  வருகிறார்கள். 

;