tamilnadu

என்எல்சி விபத்துக்கு காரணமானோர் மீது நடவடிக்கை: சிஐடியு வலியுறுத்தல்

கடலூர், ஜூலை 2 - என்எல்சி விபத்துக்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு கடலூர் மாவட்ட  செயலாளர் பி. கருப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெய்வேலி 2ஆவது அனல்மின் நிலை யத்தின் 5ஆவது அலகில் உள்ள பாய்லர்  வெடித்து சிதறியது. இதில் 6 தொழிலாளர்கள்  உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்து உயி ருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இந்த விபத்திற்கு அதிகாரி களின் அலட்சியப் போக்கே காரணம். இரண்டாவது அனல் மின்நிலையத்தில் ஏற்கனவே இரண்டு முறை விபத்து ஏற்பட்டு  உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. என்எல்சி நிர் வாக அதிகாரிகளின் அலட்சியத்தாலும் முறை யான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத தாலும் மீண்டும் மீண்டும் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர்.

கடந்தகாலங்களில் விபத்து நிகழும்போ தெல்லாம், அனுபவமில்லாத உள்ளூர் ஒப்பந்  தக்காரர்களுக்கு மாற்றாக அனுபவமுள்ள பெல் நிறுவனத்திடம் பராமரிப்பு பணிகளை  ஒப்படைக்க வேண்டும் என சிஐடியு வலி யுறுத்தியது. நிர்வாகம் அதை அமல்படுத்த மறுத்ததால் மீண்டும் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்த தொழிலாளர்களின் குடும்பத் திற்கு தலா 1 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை அளிக்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதோடு தலா 25  லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். சிகிச்சையில் உள்ள ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  மத்திய அரசு இப்பிரச்சினையில் நேரடி யாக தலையிட்டு, விசாரணை நடத்தி விபத் துக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் துறை யில் அனுபவமுள்ள நிபுணர்களைக் கொண்டு  பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.