கடலூர், ஜூன் 6- கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலை யில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மாலையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சுற்று வட்டாரத்திலும் பெய்த மழையானது கொத்தவாச்சேரி யில் 44 மில்லி மீட்டராக பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழை விபரம் வருமாறு (மில்லி மீட்டரில்) குறிஞ்சிப்பாடி 37, வடக்குத்து 36, மாவட்ட ஆட்சியரகம் 17.3, கடலூர் 15.4, குடிதாங்கி, வானமாதேவி தலா 10, பண்ருட்டி 9, பரங்கிப்பேட்டை 7, குப்பநத்தம் 3, விருத்தாச லம் 1 மில்லி மீட்டராக பதிவாகியிருந்தது. வெள்ளிக்கிழமையன்று மின்னல் தாக்கியதில் கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தைச் சேர்ந்த பா.தமிழ்மணி, வண்டிப்பாளையம் கால வாய் தெருவில் மா.செந்தில்வேலன் ஆகியோரது வீட்டுத் தோட்டத்தி லிருந்த தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புப் படை யினர் விரைந்துச் சென்று தீயை அணைத்தனர். வெள்ளிக்கிழமை மாலையில் மழை பெய்த போதிலும் சனிக்கிழ மையன்றும் (ஜூன் 6) கடலூர் மாவட்டத்தில் 100.4 டிகிரி வெயில் பதிவானது. இதனால், உஷ்ணமான கால நிலையே நிலவியது.