tamilnadu

img

சுவாமி சகஜானந்தாவின் 130-வது பிறந்த நாள் விழா

சிதம்பரம், ஜன. 27- கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏழை  எளிய மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும்  என்ற உயரிய நோக்கில் சுவாமி சக ஜானந்தா  சிதம்பரத்தில் நந்தனார் பெயரில்  கல்வி நிறுவனங்களை நிறுவினார். சட்ட மன்ற உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் 35 ஆண்டு காலம் பணி யாற்றியுள்ளார். இவரது சேவையை மதிக்கும்  வகையில் தமிழக அரசு அவர் வாழ்ந்த இடத்தில் மணி மண்டபம் அமைத்துள்ளது. அவரது 130 ஆவது பிறந்தநாள் விழா திங்களன்று (ஜன.27) மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செய லாளர் வாஞ்சிநாதன், நந்தனார் கல்விக்  கழக துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.தண்டேஸ்  வர நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர்  மாரியப்பன். மணி மண்டப ஒருங்கிணைப்பா ளர் பாலையா, அண்ணாமலை பல்கலைக் கழக எஸ்சி எஸ்டி ஆசிரியர் மற்றும் ஊழியர்  சங்கத் தலைவர் விஜய், தமிழக அரசின் அனைத்து ஓய்வூதிய சங்கத்தின் நிர்வாகி கள் பழனி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட சாமி சகஜானந்தா மீது பற்று கொண்டவர்கள், ஆதர வாளர்கள், பள்ளியின் முன்னாள் மாண வர்கள் என பலரும் மணி மண்டபத்திற்கு வந்து  அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவரது படம்  அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் வைக்கப் பட்டு சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளில் மாணவர்கள் அணிவகுப்புடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.  பின்னர் மணி மண்டப  வளாகத்தில் சகஜானந்தா சமூக பேரவை சார்பில் நந்தனார் பள்ளியில் படித்து அரசு  தேர்வுகளில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசு கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நந்தனார் கல்விக் கழக தலைவர் மருத்துவர் சங்க ரன்.  நிர்வாகிகள் நீதிவளவன், விடுதலை சிறுத்  தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அறவாழி, சமூக ஆர்வலர்கள் செல்வம், நாக ராணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அவரது பிறந்த மற்றும் நினைவு  நாளை அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்று மணிமண்டப நிர்வாகிகள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள். தற்போது பயிலும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத் துள்ளனர்.

;