tamilnadu

img

சார்ஜ் செய்த படியே பாட்டுக்கேட்ட சிறுமி செல்போன் வெடித்து பலி

கஜகஸ்தான் நாட்டில் சார்ஜ் போட்டுக்கொண்டே இயர் போன் மூலம் பாட்டுக்கேட்ட 14 வயது சிறுமி, போன் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
கஜகஸ்தான் நாட்டின் பாஸ்தோப் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவிஅலுவா அப்ஸல்பென்.  இவர்  இரவு போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்க சென்றார்.  அவர் தூங்கும் போது தனது தலையணைக்கு அருகில் சார்ஜ் போட்டுக் கொண்டே தூங்கியதால் போன் சூடாகி வெடித்துள்ளது. இதனால், தலையணையில் தீப்பிடித்து அது அப்படியே சிறுமியின் உடல் முழுவதும் தீ பரவியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  நேற்று காலை சடலமாக கிடந்த மகளைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியின் தலை அருகே செல்போன் இருந்தால் படுகாயம் ஏற்பட்டு, உயிர் பிரிந்துள்ளது. போன் வெடித்து சிறுமி உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.