ஓசூர்,மார்ச் 1- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மார்க்கெட்டில் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சிய டைந்துள்ளது. ஓசூர் சுற்றுவட்டாரத்தில் அதிகளவில் விளை விக்கப்படும் காய்கறிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஓசூர் விவசாயிகளின் காய்கறி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தளப் பள்ளி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கடந்த வாரம் 160 ரூபாய்க்கு விற்ற குடைமிளகாய் தற்போது கிலோ 8 ரூபாயாகவும், தக்காளி கிலோ 3 ரூபாய்க்கும், மிளகாய் கிலோ 8 ரூபாய்க்கும் விற்கப்படு கிறது. 80 கிலோ கொண்ட பீட்ருட் மூட்டை 350 ரூபாய்க்கும், முட்டைக்கோசு 3 ரூபாய்க்கும் மட்டுமே விற்கப்படுகிறது.