ஓசூர்,அக்.15- ஓசூரில் தர்கா அருகில் ஸ்டெப் காலனியில் உள்ள அண்ணாமலை டவர்ஸில் ராம்ராஜ் காட்டனின் 102 வது கிளை துவக்க விழா நடை பெற்றது. மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சி முன்னிலை வகித் தார். ரங்கசாமி வரவேற்றார். மருத்துவர் சண்முகவேல் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுகிசிவம் கிளையை திறந்து வைத்து முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஹீட் ரீட்மண்ட் நிர்வாக இயக்குநர் அருண்பெல்லா கூர் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய சுகி செல்வம், “ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 50 ஆயிரம் நெச வாளர் குடும்பங்களை வாழ வைப்பதுடன், தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண் பாட்டையும் உலகிற்கு வேட்டி மூலம் வெளிப்ப டுத்தி வருகிறது” என்றார். ராம்ராஜ் காட்டன் நிறு வனர் நாகராஜன், “தென் னிந்தியாவில் மொத்தம் 101 கிளைகள் உள்ளது. பெங்களூரில் மட்டும் 8 கிளை களும் உள்ளன. ஓசூர் மக்க ளின் தேவைக்காக 2 வது கிளை துவங்கப்பட்டுள்ளது” என்றார். பருத்தி நூலினாலான விதவிதமான, நவீன, வித்தி யாசமான, வகைகளில், டிசைன்களில் தரமான நவீன கரை வேட்டிகள், கறை படி யாத வேட்டி, நறுமன வேட்டி, கூல் காட்டன், சுப மூகூர்த்த, எம்ப்ராய்டரி, மயில் கண், பஞ்சகச்ச வகைகளில் வேட்டிகள், பல வகை சட்டை கள் குழந்தைகள், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அனை வருக்கும் ஏற்ற வேட்டி, சட்டை, பணியன், உள்ளா டைகள், வெல் குரோ, பாக் கெட் வேட்டிகள், பெண்க ளுக்கான ஆடைகள், உள்ளா டைகள், லெகின்ஸ் அனைத் தும் உள்ளது. விமான நிலை யங்களிலும் கிளைகள் துவங்க இருப்பதாகக் கூறி னார். இந்நிறுவனத்தின் சமூக சேவை திட்டத்தின் தொடர்ச்சி யாக ஓசூரில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து முன்னேற்றி அமைதி கிராமமாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் கூறினார்.