கோவிட் -19 தொற்றுநோய்களின் காலங்களில் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான பரிசீலனையின் கீழ் கே.சி.இ.டி தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் மாநில அரசை வலியுறுத்தியதன் பின்னணியில் என்.எஸ்.யு.ஐ.யின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
என்.எஸ்.யு.ஐ கர்நாடகா தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி , “ஜூலை 30 மற்றும் ஜூலை 31 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கே.சி.இ.டி தேர்வுகளில் தலையிட்டு ,அதை ஒத்திவைக்கக் கோரி கர்நாடகாவின் மரியாதைக்குரிய உயர் நீதிமன்றத்தில் என்.எஸ்.யு.ஐ கர்நாடகா ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளது.”
கர்நாடக அரசு மார்ச் 30 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் கே.சி.இ.டி தேர்வுகளை ஒத்திவைப்பதாக தெறிவித்தது. பின்னர் மே 13 அன்று கே.சி.இ.டி ஜூலை மாதம் நடத்தப்படும் என்று அறிவித்தது.
அந்த மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வுகள் இன்னும் நடைபெறாததால் பிஜி-சிஇடி மற்றும் டிப்ளோமா-சிஇடி தேர்வுகளையும் ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது. பிஜி-சிஇடி மற்றும் டிப்ளோமா-சிஇடி தேர்வுகள் முறையே ஆகஸ்ட் 8-9 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தன.
கோவிட் -19 தொற்றுநோயால் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கே.சி.இ.டி தேர்வு 2020 ஐ ஒத்திவைக்கக் கோரி என்.எஸ்.யு.ஐ கேட்டுக்கொண்டதன் காரணமாக கர்நாடகா பொது நுழைவுத் தேர்வு ஜூலை 30,31 ல் நடக்க இருந்த தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.